சுவையான மசால் பூரி செய்முறை
தேவையான பொருட்கள்
பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பட்டை - 2
மிளகு - 6-10
பிரிஞ்சி இலை; - 1
பெ. வெங்காயம் - 1
தக்காளி - 2
ப. மிளகாய் - 1-2
பூண்டு - 6-10
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
புதினா இலை - 1 கைப்பிடி
செய்முறை
☘ பச்சை பட்டாணி காயாக இருந்தால், சீக்கிரம் வெந்து விடும்.. அதுவே காய்ந்த பச்சை பட்டாணி என்றால் அதனை தண்ணீரில் ஊற வைத்து விசில் அதிகமாக விடவும்..
☘ வாணெலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, மிளகு, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு, இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
☘ வதக்கியதை மிக்ஸி ஜாரில் போடவும். அதனுடன் புதினா இலை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்.
☘ குக்கரில் பச்சை பட்டாணி, தோல் உரித்த உருளைக்கிழங்கு, உப்பு, தண்ணீர் சேர்த்து விசில் விட்டு இரக்கவும்.
☘ குக்கர் மூடியை திறந்து பட்டாணி ஒன்னு - இரண்டாக மசித்துக் கொள்ளவும்.
☘ வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போடவும். அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
☘ அதனுடன் மசித்த ப. பட்டாணி கலவையை தண்ணீர் உடன் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.. (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்). கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்..
☘ ஒரு தட்டில் பூரியை சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும். அதன் மேல் குருமா நறுக்கிய வெங்காயம் சிறிது ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
பூரி செய்முறை
மைதா மாவு - 1/2 கப்
ரவை - 1 1/2 கப்
ஜவ்வரிசி மாவு - 3 கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
☘ ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, ஜவ்வரிசி மாவு, உப்பு , தண்ணீர் சேர்த்து பூரி மாவு பிசைவது போல் பிசைந்து 15 நிமிடங்கள் ஊற விட்டு, பின்பு அதனை பூரிக்கு திரட்டுவது போல் திரட்டி, சிறு மூடியை வைத்து அழுத்தி சிறு சிறு பூரியாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.. பூரி தயார்...