நிறம் அதிகரிக்க நலங்குமாவு குளியல் பொடி செய்வது எப்படி?

நலங்குமாவு குளியல் பொடி

தேவையான பொருட்கள்:

பச்சைப் பயிறு            -          500கி
கடலைப்பருப்பு           -          100கி
ரோஜா   பூ                      -          100கி
ஆவாரம் பூ                     -         100 கி
பூலாங்கிழங்கு            -          100கி
கோரைக் கிழங்கு      -          100கி
கஸ்தூரி மஞ்சள்        -          100கி
வெட்டி வேர்                   -          10 கி

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒன்றாக வெயிலில் காய வைத்து, மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.. 

பயன்கள்:

🌹பச்சைப் பயிறு - ஆன்டி ஆக்ஸிடென்ட்  பண்புகளை கொண்டுள்ளது.. 
பச்சை பயிறு சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்கிறது.. 

🌹கடலைப்பருப்பு  - பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டக்  கூடியது. சுருக்கம் ஏற்படாது.. முகம் வழுவழுப்பாக இருக்கும். 

🌹ரோஜா பூ - சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். 

🌹ஆவாரம் பூ - சருமத்தை வெண்மையாகவும் 
தங்கம் போலவும் வைத்திருக்கும். 

🌹பூலாங்கிழங்கு - இது ஒரு கிருமி நாசினி..உடலில் நறுமணம் வீசும். தோல் நோய்களுக்கு மிகவும் நல்லது.. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள்  போன்றவற்றை தடுக்கும்.. 

🌹கோரைக்கிழங்கு - சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மையை தருகிறது. முகப்பரு,வியர்க்குரு,மரு வராமல் தடுக்கிறது.. 

🌹கஸ்தூரி மஞ்சள்- இறந்த செல்களை எதிர்த்து போராடுகிறது.. தேவையற்ற முடிகளை அகற்றுகிறது. முகம் பொலிவு  பெறுகிறது.. இது ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட்..

🌹வெட்டிவேர் - இது  முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்து விடும். வெட்டி வேர் குளிர்ச்சியை தருவதுடன் நல்ல நறுமணத்தையும் தருகிறது.. 


நல்ல நிறத்தை அதிகரிக்க கூடிய இந்த குளியல் பொடியை குளிக்கும் போது சிறிது  மாவுடன் தண்ணீர் சேர்த்து பயன்படுத்தவும்.. 



Post a Comment

Previous Post Next Post