பருப்பு வடை செய்வது எப்படி?

 பருப்பு வடை செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
பட்டாணி பருப்பு             -    1/2 கி
சின்ன வெங்காயம்      -    200-250கி
சோம்பு                                 -    1 தேக்கரண்டி
புதினா                                 -    சிறிது
கறிவேப்பிலை                -    2 கொத்து
கொத்தமல்லி இலை    -    சிறிது
பெருங்காயத்தூள்         -    சிறிது
எண்ணெய்                        -     1/2லி
உப்பு                                       - தேவைக்கேற்ப

அரைக்க:
காய்ந்த மிளகாய்            -     6-8
சீரகம்;                                    -     1தேக்கரண்டி
சின்ன வெங்காயம்        -     5-10
பூண்டு                                   -     15
இஞ்சி                                    -     1 துண்டு
பட்டை                                     -     2
கிராம்பு                                  -     3


செய்முறை:

        🌹பட்டாணி  பருப்பை  அலசி 1 1/2 மணி நேரம் ஊற விடவும். 

        🌹மிக்ஸியில்  காய்ந்த மிளகாய், சீரகம்,  சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு  சேர்த்து  தண்ணீர் சேர்க்காமல்  அரைக்கவும். 

🌹பருப்பின் தண்ணீரை சுத்தமாக வடித்துக்  கொள்ளவும். 

🌹மிக்ஸியில்  அரைத்த  விழுதுடன்  உப்பு,பருப்பை  சேர்த்து  கொர கொரப்பாக  அரைக்கவும். 


🌹அரைத்ததை  ஒரு  பாத்திரத்தில் போட்டு  சின்ன வெங்காயம்(நறுக்கியது), புதினா இலை(நறுக்கியது), கொத்தமல்லி இலை (நறுக்கியது), 
கறிவேப்பிலை (நறுக்கியது), சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. 
(தண்ணீர் சேர்க்கலாம் பிசையவும்) 

🌹வாணெலியில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  பருப்பு  விழுதை  உருண்டை பிடித்து  கையால்  தட்டி  எண்ணெயில் போடவும். 
🌹நுரை அடங்கியவுடன்  வடையை எடுத்து  சுவைக்கலாம். 

  சுவையான பருப்பு வடை தயார்

Post a Comment

Previous Post Next Post