எளிமையான முறையில் உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?

 எளிமையான முறையில் உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி? 


தேவையான பொருட்கள்:

ருளைக்கிழங்கு      -  4

எண்ணெய்                    -   2 தேக்கரண்டி

கடுகு                                 -   1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு          -    1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்     -    1 சிட்டிகை

பெ. வெங்காயம்          -    3

பச்சை மிளகாய்           -     5-7

கறிவேப்பிலை             -     சிறிது

இஞ்சி                                -     சிறு துண்டு

பூண்டு                               -     6-8 பல்

மஞ்சள் தூள்                  -     1/2தேக்கரண்டி

சாம்பார் தூள்                -      1 தேக்கரண்டி

கடலை மாவு                  -       1 கப்

உப்பு                                   -      தேவைக்கேற்ப

கொத்தமல்லி இலை -      சிறிது


செய்முறை:

   🌷உருளைக்கிழங்கை நன்கு அலசி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரண்டாக வெட்டி  போட்டு வேக விடவும். 


  🌷வெந்தவுடன் குளிர்ந்த நீர் ஊற்றி அதன் தோலை உரித்து மசித்துக்  கொள்ளவும். 


   🌷ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.. 


   🌷அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து  வதக்கவும்.  

    🌷குருமாவிற்கு தேவையான கடலை மாவை தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து  அதனுடன் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.. 


   🌷நன்கு கொதித்து பச்சை வாசனை அடங்கும் போது மசித்த உருளைக்கிழங்கை  போடவும்.. 

     🌷5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும். 


சுவையான பூரி உருளைக்கிழங்கு குருமா தயார்

உருளைக்கிழங்கின்  பயன்கள்:

* வாத நோய் சரியாகும்.. 

*இதயம் வலுப்படும்..

* முகம் பொலிவு  பெறும்.. 

*மலச்சிக்கல் சரியாகும். 



Post a Comment

Previous Post Next Post