எளிமையான சமையல் டிப்ஸ்
🌷தோசை வார்க்கும் போது கல்லில் ஒட்டிக் கொள்கிறதா ? ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை வெள்ளைத் துணியில் கட்டிக் கொண்டு, அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்த பின், மாவை வார்த்தால் தோசை ஒட்டாமல் வரும்..
🌷உளுத்தம்பருப்பை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது தயிரில் கலந்து பச்சடி செய்யலாம். ரசம் சாதத்தில் அந்தப் பொடியைப் போட்டு கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் விட்டு கலந்து கொண்டால் சாதம் சூப்பர் டேஸ்டுடன் இருக்கும்.
🌷பச்சைக்கொத்துமல்லித்தழையைப் பச்சையாக துவையல் அமைக்கும்போது
புளி போடுவதற்கு ஸ பதிலாக ஒரு துண்டு மாங்காய் போட்டு அரைக்கும் போது துவையல் சுவையாக இருக்கும்..
🌷மைதா மாவு அல்வா செய்யும் போது சில சொட்டுகள் பாதாம் எஸென்ஸ் கலந்தால் மணமும் சுவையும் கூடும்..
🌷 வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது அதனுடன் சிறிது சீரகம், தேங்காய்த் துருவலை லேசாக சிவந்த நிறம் வரும் வரை வறுத்து பொடி செய்து சேர்க்க வேண்டும்..
சாப்பிட்டால் மணமாகவும், ருசியாகவும்ருசியாகவும் இருக்கும்..
Tags:
சமையல் டிப்ஸ்