பட்டாணி புலாவ் செய்வது எப்படி?

 பட்டாணி புலாவ் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
பட்டாணி                       -       1 கப்
அரிசி                              -       1கப்
கடலை எண்ணெய்  -      1 தேக்கரண்டி
நெய்                                 -      2 தேக்கரண்டி
ஏலக்காய்                       -       2-3
முந்திரி                            -       5-6
பிரிஞ்சி இலை            -       1-2
சோம்பு                             -       1 தேக்கரண்டி
பெ. வெங்காயம்         -       2
தேங்காய் பால்            -        2 கப்
உப்பு                                  -       தேவைக்கேற்ப
புதினா                             -       15-20 இலைகள்
கொத்தமல்லி இலை -       சிறிது
பூண்டு                               -        5 பல்
இஞ்சி                                -        சிறிது

செய்முறை:

🌷அரிசியை தண்ணீர் ஊற்றி அலசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.. 

🌷குக்கரில் எண்ணெய் 1 தேக்கரண்டி, நெய் 2 தேக்கரண்டி ஊற்றி பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி, சோம்பு, பெரிய வெங்காயம் (நீள வாக்கில் ), ப. மிளகாய்-1 போட்டு வதக்கவும்.. 

🌷மிக்ஸியில் ப. மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு அரைக்கவும்.. 

🌷குக்கரில் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.. 

🌷ப. பட்டாணி, உப்பு , புதினா , கொத்தமல்லி இலை ஆகியவற்றைப் சேர்த்து வதக்கவும்.. 

🌷பட்டாணி வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.. 
(1கப் அரிசிக்கு  -  2 கப் தேங்காய் பால்

🌷குக்கரில் அரிசியை போட்டு மூடி விஸ்சில் விட்டு இறக்கவும்.. 

சுவையான பட்டாணி புலாவ் தயார்

குறிப்பு:

ப. பட்டாணி காயாக இருந்தால் நேரடியாக சமையலில் பயன்படுத்தலாம்... 

காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவு ஊற வைத்து அடுத்து நாள் பயன்படுத்தவும்.. 

பயன்கள்:

புரோட்டீன், வைட்டமின் கே நிறைந்துள்ளது.. 
எலும்பு வலிமை பெறும்.. 
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தை தரக் கூடியது... .. 

Post a Comment

Previous Post Next Post