புளி சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
புளி - 200கி
நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 10-15 பல்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
நிலக்கடலை - 100 கி
புளி குழம்பு பொடி - 1தேக்கரண்டி
அரிசி - 2 கப்
செய்முறை
🌷அரிசியை அலசிக் 1/2 மணி நேரம் ஊற விடவும்.
🌷குக்கரில் 1 கப் அரிசிக்கு 2கப் விதம்,மொத்தம் 4 கப் தண்ணீர் ஊற்றி விசில் விடவும்.
🌷புளியை தண்ணீரில் அலசி ஊற வைக்கவும்.
🌷வாணெலியில் நிலக்கடலையை வறுத்து குக்கரில் இருக்கும் சாததிற்குள் போடவும்.
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், பூண்டு ,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்..
🌷வதங்கிய பின் புளியை கரைத்து வடித்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள்,புளி குழம்பு பொடி, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். .
🌷கொதிக்கும் போது புளியின் மணம் நன்கு வரும்போது அடுப்பை அனைத்து சாதத்தில் ஊற்றி கிளறவும்...
சுவையான புளி சாதம் தயார்
Tags:
புளி சாதம்