மொறு மொறு பூந்தி செய்வது எப்படி❓

மொறு மொறு பூந்தி செய்வது எப்படி❓


தேவையான பொருட்கள்:

புழுங்கல் ஆரிசி      -     500கி
கடலை மாவு              -     500கி
காய்ந்த மிளகாய்    -     15
உப்பு                               -     தேவைக்கேற்ப
பொட்டுக்கடலை      -     100கி
நிலக்கடலை              -     150கி
கறிவேப்பிலை          -    1 கைப்பிடி
பூண்டு                           -     1 கட்டை
கடலை எண்ணெய்
                 அ
           ஆயில்                 -      1லி

செய்முறை:

🌹அரிசியை தண்ணீரில் அலசி 1மணி நேரம் ஊற வைக்கவும்.. 

🌹முதலில் மிளகாயை போட்டு நன்கு அரைக்கவும் பின்னர் அதனுடன் அரிசியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும். 

🌹அரைத்த பின்னர் அதனுடன் கடலை மாவு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 

🌹வாணெலியில் கடலை எண்ணெய் (அ) ஆயில் ஊற்றி காய்ந்ததும் பூந்தி தேய்க்கும்  கரண்டியில் மாவை ஊற்றி  தேய்க்கவும். 
🌹நுரை அடங்கும் வரை எண்ணெயில் விட்டு எடுக்கவும்.. 

🌹பூந்தி பொறித்த பின்னர் அந்த எண்ணெயில் நிலக்கடலை போட்டு எடுக்கவும்.. அதன்பின்னர் பொட்டுக்கடலை, கறிவேப்பிலை ,தோலுடன் தட்டிய பூண்டு போட்டு  பொறித்தெடுக்கவும். 

🌹பூந்தி, நிலக்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை ,பூண்டு இவ்வணைத்தையும் ஒன்றாகக் கலக்கி மூடி இருக்கும் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். 

"சுவையான மொறுமொறு பூந்தி தயார்"


Post a Comment

Previous Post Next Post