ரவை உப்புமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
ப. மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
கேரட் - 2
பீன்ஸ் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3-4 பல்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை - சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
🌷வாணெலியில் ரவையை வறுத்தெடுக்கவும்..
🌷அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
🌷அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை உப்பு போட்டு வதக்கவும்.
🌷கேரட், பீன்ஸ் இரண்டையும் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்..
🌷பாதி வெந்தவுடன் அதற்கு தேவையான தண்ணீர் சேர்க்கவும்..
(*1கப் ரவைக்கு = 3 கப் தண்ணீர் சேர்க்கவும்*)
🌷தண்ணீர் கொதி வரும் போது ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும்.
🌷நெய் விட்டு இறக்கவும்.. சிறிது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்..
சுவையான ரவை உப்புமா தயார்
Tags:
ரவை உப்புமா