சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 100கி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கஸ்தூரிமேத்தி - சிறிது
சர்க்கரை - சிறிது (pinch)
அரைக்க
கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 2
இஞ்சி - சிறிது
காய்ந்த மிளகாய் - 1
முந்திரி - 4
தாளிக்க
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
செய்முறை:
🌷100 கிராம் பன்னீரை சிறு சிறு துண்களாக நறுக்கி சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
🌷ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்..
🌷அதனுடன் தக்காளி, பூண்டு, இஞ்சி, முந்திரி போட்டு வதக்கி ஆற விட்டு அரைக்கவும்..
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு,
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கவும்..
🌷அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவை, கரம் மசாலா,உப்பு போட்டு நன்கு வதக்கவும்..
🌷வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்..
🌷கொதி வரும் போது தண்ணீருக்குள் இருக்கும் பன்னீரை எடுத்து கிரேவிக்குள் போடவும்..
🌷சிறிது காய்ந்த வெந்தயக் கீரையை (கஸ்தூரி மேத்தி) கையில் வைத்து கிரேவிக்குள் தேய்த்து விடவும். இல்லையெனில் கொத்தமல்லி இலையை தூவிக் கொள்ளலாம்.
🌷கிரேவிக்குள் வெள்ளை சர்க்கரை (சீனி)
போட்டு இறக்கவும்..
சுவையான பன்னீர் கிரேவி தயார்
சப்பாத்திக்கு ஏற்ற சுவையான கிரேவி
Tags:
பன்னீர் கிரேவி