அரைத்த துவரம்பருப்பு சாம்பார் செய்வது எப்படி?

 அரைத்த துவரம்பருப்பு சாம்பார் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு               -     1 1/2 கப்
விளக்கெண்ணெய்   -     1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                  -     1/4 தேக்கரண்டி
புளி                                     -      சின்ன எலுமிச்சை அளவு

தாளிக்க:
கடலை எண்ணெய்     -      1தேக்கரண்டி
பெருங்காயம்                 -      சிறிது
கடுகு                                   -      1/2தேக்கரண்டி
சின்ன வெங்காயம்     -      1/4 கி
கறிவேப்பிலை               -      சிறிது

அரைக்க:
கடலை பருப்பு                -     1  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு            -     1/2தேக்கரண்டி
வெந்தயம்                         -     1/4தேக்கரண்டி
கொத்தமல்லி                  -    1 தேக்கரண்டி
சீரகம்                                   -     1 தேக்கரண்டி
மிளகு                                  -     1/2தேக்கரண்டி
தேங்காய்                           -     10துண்டு
சின்ன வெங்காயம்      -     7-8
காய்ந்த மிளகாய்           -     6

செய்முறை:

🌹துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி அடுப்பில் வைக்கவும். 

🌹பருப்பு வேகும் போது விளக்கெண்ணெயையும்  , மஞ்சள் தூளையும் போட்டு  வேக விடவும். 

🌹புளியை தண்ணீரில் அலசி ஊற விடவும்.. 

🌹வாணெலியில் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கொத்தமல்லி, சீரகம், மிளகு ,காய்ந்த மிளகாய் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும்.. 

🌹வறுத்த அனைத்தையும் ஆற வைத்து அதனுடன் தேங்காய், சின்ன வெங்காயம் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.. 

🌹பருப்பு நன்றாக வெந்தவுடன் அதை கடைய வேண்டும்.. 

🌹வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தூள்,கடுகு போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம்(அறியாமல் முழுமையாக போடவும்) , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.. 

🌹அதனுடன் பருப்பு கடையல்+புளி தண்ணீர்+அரைத்த மசாலா+உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்.. 

🌹கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.. 

குறிப்பு:

முருங்கைக்காய் இருப்பின் தாளிப்பதற்கு சின்ன வெங்காயத்தை குறைத்துக் கொண்டு அதனை பயன்படுத்தலாம்.. 

வெண்பொங்கலுடன் அரைத்த பருப்பு கிரேவி
Best combination.. 

துவரப்பருப்பின் பயன்கள்:

1.புரத சத்தும்
, நார் சத்தும் நிறைந்துள்ளது.. 

2. வைட்டமின் சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. 

3. மலச்சிக்கல் பிரச்னையை தடுக்கும்.. .. 




Post a Comment

Previous Post Next Post