வாத்து வருவல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
வாத்து - 1கி
க. மிளகாய் - 2
ப. மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
கடலை எண்ணெய் - 3தேக்கரண்டி
கடுகு - 1தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10-15
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
பூண்டு - 15கி
இஞ்சி - 20கி
சின்ன வெங்காயம் - 125கி
தேங்காய் - 50கி
பட்டை - 3
கிராம்பு - 3
சோம்பு - 1தேக்கரண்டி
கறி மசாலா - 2மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை வதக்கி,கறிவேப்பிலை , பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,சோம்பு,தேங்காய் ,கறி மசாலாவை போட்டு அரைக்கவும்.
🌹ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
🌹அதனுடன் வாத்து, மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா எல்லா வற்றையும் கலந்து வேக விடவும்.
🌹வேகும் போது எண்ணெய் மேலே பிரிந்து வரும்..
சுவையான வாத்து வருவல் தயார்..
பயன்கள்:
இரத்ததின் சர்க்கரையை சரி செய்யும்
ஜலதோஷதிற்கு ஏற்றது..
எலும்பு திசுக்கள் வலு பெரும்..
Tags:
வாத்து வருவல்