எளிமையாக (வெஜ்)தக்காளி சாதம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
கடலை எண்ணெய் - 2மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கேரட் - 2 பெரிய
பீன்ஸ் - 6
மீல் மேக்கர் (அ) ப. பட்டாணி-1கப்
தக்காளி - 6
ஏலக்காய் - 4
முந்திரி - 6
பிரிஞ்சி இலை - 2
ஸ்டார் அன்னாசி - 3
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
அரைக்க
பூண்டு - 10-15பல்
இஞ்சி - 2விரல் துண்டு
பட்டை - 4
கிராம்பு - 4
காய்ந்த மிளகாய் - 6-8
சோம்பு - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 100 கி
செய்முறை:
🌷அரிசியை தண்ணீர் ஊற்றி அலசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
🌷குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, ஏலக்காய்,ஸ்டார் அன்னாசி,முந்திரி,கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம்,
ப. மிளகாய் போட்டு வதக்கவும்..
🌷அரைத்த மசாலாவை அதனுடன் சேர்ந்து நன்கு வதக்கவும்..
🌷 தக்காளி, புதினா, கேரட், பீன்ஸ், மீல் மேக்கர் (அ) ப. பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து வதக்கவும்..
🌷அனைத்தும் வதங்கியதும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்து வரும்போது அரிசியை போட்டு வேக விடவும் ..
🌷அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து வெண்ணெய் போட்டு குக்கரை மூடி விசில் விடவும்..
சுவையான (வெஜ்) தக்காளி சாதம் தயார்..
குறிப்பு:
1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சரியான அளவு..
பழய அரிசி எனின் கொஞ்சம் அதிகம் சேர்க்கவும்..
Tags:
தக்காளி சாதம்