(ஜலதோஷம்)கஷாயம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
வெற்றிலை - 2
துளசி - 10
கற்பூரவல்லி - 2
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 10
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 5
தண்ணீர் - 1 டம்ளர்
தேன் - 1/2 - 1 தேக்கரண்டி
செய்முறை:
🌷ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இஞ்சி,வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்..
🌷மிளகு, சீரகம், கிராம்பு ஆகியவைகளை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்..
🌷தண்ணீர் கொதித்து பாதி ஆகும் வரை விட்டு இறக்கவும்..
🌷குழந்தைகளுக்கு தேன் கலந்து பருகக் கொடுக்கலாம்..
குறிப்பு
இது குழந்தைகளுக்கு ஆன அளவு, பெரியவர்கள் அதிக படுத்திக் கொள்ளவும்..
பயன்கள்:
வெற்றிலை - சுவாச நோய்கள் சரியாகும்..
துளசி - கோழையை அகற்றக் கூடியது.
கற்பூரவல்லி- மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் சரியாகும்..
மிளகு - சளி தொந்தரவுகள் நீங்கும்.
சீரகம் - சளி மற்றும் காய்ச்சலை போக்கும்..
இஞ்சி - இருமலைக் குறைக்கிறது..
கிராம்பு - மூக்கு ஒழுகுதல், தலைவலி சரியாகும்.
தேன் - வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்..
Tags:
ஜலதோஷ கஷாயம்