அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
அரிசி - 2கப்
துவரம் பருப்பு - 1கப்
கடலை எண்ணெய் - 1மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 150கி
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 15 பல்
இஞ்சி - விரல் நீளம்
பட்டை - 4
கிராம்பு - 4
சோம்பு - 1தேக்கரண்டி
மிளகு - }1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தக்காளி - 3
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை:
🌹அரிசியும் ,பருப்பையும் ஒன்றாக தண்ணீர் விட்டு அலசிக் 1/2 நேரம் ஊற விடவும்..
🌹அரைக்க
பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, மிளகு, சோம்பு, மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும்..
🌹குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்..
🌹அரைத்த மசாலா,தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
🌹வதக்கிய பின்னர் தண்ணீர் (5கப்) சேர்க்கவும்..
1கப் அரிசிக்கு - 2 கப் தண்ணீர்
1கப் பருப்பு - 1 கப் தண்ணீர்
🌹தண்ணீர் கொதி வரும்போது அரிசியை போடவும்..
🌹வெண்ணெய், கொத்தமல்லி இலையை போட்டு குக்கரை மூடியிட்டு 2 விஸ்சில் விட்டு இறக்கவும்..
🌷சுவையான அரிசிம் பருப்பு சாதம் தயார்