கேழ்வரகு (ராகி) பக்கடா

கேழ்வரகு பக்கோடா🌾
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


தேவையான பொருட்கள்:
கேழ்வரகு (ராகி) மாவு       -     250கி
வெண்ணெய்                        - 1      தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய:
முருங்கை இலை                -2 கொத்து
சின்ன வெங்காயம்           -100 -150கி
கறிவேப்பிலை                     -சிறிதளவு
கொத்தமல்லி இலை        -சிறிதளவு

அரைக்க:
காய்ந்த மிளகாய்      -  4-6
பூண்டு                            -    5 பல்
இஞ்சி                             -   சிறு துண்டு
கல் உப்பு                        -   தேவையான                                                      அளவு
சீரகம்                               -   1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை           -   சிறிது

பொறிக்க:
கடலை எண்ணெய்   -  1/2லி
செய்முறை:

🌾ஒரு பாத்திரத்தில் 250 gm  ராகி மாவை போடவும்.. 

🌾காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி,
கல் உப்பு, சீரகம், கறிவேப்பிலை, தண்ணீர் சிறிது விட்டு paste ஆக அரைக்கவும்... 

🌾ராகி மாவுக்குள் அரைத்த மசாலா,  பொடியாக நறுக்கிய முருங்கை இலை, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் கொத்தமல்லி இலை ,வெண்ணெய் ஆகியவற்றை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.. 

  🌾எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக கிள்ளி போடவும்.. 
 🌾
 *இப்போது சுவையான ராகி வடை தயார்*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 

ராகியின் பயன்கள்:
"""""""""""'"""""" """"""""""""""""""
1. தாய்ப்பாலுக்கு அடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சத்தான உணவு.. 

2.உடல் எடையை குறைக்க.. 

3.பற்கள் மற்றும் எலும்புகள் வலு பெற... 

4.உடல் வலிமை பெற.. 

5.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.. 

6.கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.. 

7.ரத்த சோகையை தடுக்கும்.. 

8.மலச்சிக்கலை போக்கும்.. 

9.தாய்ப்பால் சுரக்கம்.. 

மருத்துவ குணங்கள் நிறைந்த ராகியை பயன்படுத்தி பயன்பெறவும்

Post a Comment

Previous Post Next Post