சாமை தக்காளி சாதம்

சாமை தக்காளி  சாதம்🍅

 தேவையான பொருட்கள்:
சாமை அரிசி               -       1 கப்
 எண்ணெய்                 -      2தேக்கரண்டி
கடுகு                              -      1/2தேக்கரண்டி
கடலைப்பருப்பு           -      1/2தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு         -      1/4தேக்கரண்டி
சின்ன வெங்காயம்   -      15-20
காய்ந்த மிளகாய்       -       2 அ 3
கறிவேப்பிலை            -       சிறிது
தக்காளி                         -       1பெரியது
உப்பு                                -        தேவை
மஞ்சள் தூள்                 -       1/4தேக்கரண்டி
புதினா                             -       சிறிது
நெய்                                 -       1தேக்கரண்டி
கொத்தமல்லி இலை  -        சிறிது
இஞ்சி                               -       சிறு துண்டு
பூண்டு                              -       5 பல்
செய்முறை:

🌷1கப் சாமை அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற விட வேண்டும்(15-30 நிமிடம் ) . 

🌷ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு போடவும். 

  🌷 நறுக்கிய சின்ன  வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்..
 
    🌷இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி,உப்பு ,புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.

    🌷 பின்பு 1கப் சாமை அரிசிக்கு 3 -3 1/2
கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்..

   🌷அரிசியை போட்டு வேக விடவும்..கொஞ்சம் நெய் ,கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்...

சுவையான  சாமை  தக்காளி சாதம் தயார்.

சாமை பயன்கள்:

1.உடல் வலிமை பெறும்.
2.இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
3.மலச்சிக்கலை போக்கும்.............

Post a Comment

Previous Post Next Post