பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 100கி
ஆயில் - 2தேக்கரண்டி
பெ. வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது- 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
முந்திரி - 5
உப்பு - தேவைக்கேற்ப
கரம் மசாலா - 1தேக்கரண்டி
வெண்ணெய் - 1தேக்கரண்டி
கிரிம்(அ)
பால் ஏடு - 1தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
🌷ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் போட்டு 2நிமிடம் வைத்து தண்ணீரை வடிக்கவும்.
🌷முந்திரியை சுடு தண்ணீரில் 10 நிமிடம் போட்டு பேஸ்டாக அரைக்கவும்.
🌷வாணெலியில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
🌷அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி (பொடியாக நறுக்கியது) -யை உப்பு சேர்த்து பேஸ்ட் போல் வதக்கவும்..
🌷பின்பு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ,கரம் மசாலா போட்டு நன்கு 5நிமிடம் கிளறி விடவும்.
🌷முந்திரி பேஸ்டை போட்டு கிளறவும்.
🌷அதற்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வேண்டும்.
🌷அதனுடன் சிறிது சர்க்கரை, வெண்ணெய் , பால் ஏடு(அ) கீரிம் போட்டு அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
🌷 பின்பு பன்னீரை போட்டு
2-3நிமிடம் கொதிக்க விடவும்.
🌷கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்..
பன்னீரின் பயன்கள்:
புரதம் அதிமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
இரத்த ஓட்டத்தை சீராக்கும்..
குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும்..
கால்சியம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்..